மேலும் செய்திகள்
சாத்துாரில் பெண்களிடம் நகை பறிப்பு * 3 பேர் கைது
07-Sep-2024
வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள தனியார் சோப்பு கம்பெனி முன்பு டீக்கடை நடத்தி வருபவர் குன்னம்பட்டியை சேர்ந்த தனலட்சுமி 80. இவர் நேற்று முன்தினம் இரவு கடையில் துாங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் வந்த நபர் ஒருவர் மூதாட்டியை தட்டி எழுப்பி கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டிய தோடு மூக்குத்தி உள்ளிட்ட நகையை பறித்து கொண்டு தப்பினார். இதை தொடர்ந்து கடைக்கு வெளியே வந்து மூதாட்டி கூச்சலிட்டார். அருகில் உள்ள கம்பெனி காவலாளிகள் வேடசந்துார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் சேனன்கோட்டை பகுதியில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ரெட்டியார் சத்திரத்தைச் சேர்ந்த பிரபு 28,என்பதும், மூதாட்டியிடம் நகை பறித்தவர் என்பதும் தெரிந்தது. அவரை கைது செய்தனர்.
07-Sep-2024