மேலும் செய்திகள்
செல்லப்பிராணிகள் உரிமம் பெற அவகாசம் நீட்டிப்பு
04-Dec-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் ஜோசப் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த செல்லப்பிராணிகள் கண்காட்சியில் மாணவர்கள் தங்களது வீடுகளில் வளர்க்கப்படும் நாய், முயல் ,பூனை மீன்கள் ,பறவைகளை அழைத்து வந்திருந்தனர். திண்டுக்கல்லில் செயின்ட் ஜோசப் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர்களிடையே கருனை, பொறுப்புணர்வு, உயிரினங்களின் மீது அன்பை வளர்க்கும் நோக்கில் செல்ல பிராணிகள் கண்காட்சி நடந்தது. மாணவர்கள் அவரவர் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை பள்ளிக்கு அழைத்து வந்து கண்காட்சியில் இடம்பெற செய்தனர். ஷிஹ்சூ பப்பி, கோல்டன் ரெட்ரீவர், பக், சிப்பிப்பாறை, பொமரேனியன் உள்ளிட்ட நாய் வகைகள், பெர்சியன், மெய்ன் கூன், நாட்டு ரக பூனைகள், முயல்கள், பறவைகள், மீன்கள் உள்ளிட்ட பல வகையான செல்லப்பிராணிகள் இடம்பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மாணவர்கள் ஒருவருக்கொருவர் செல்லப்பிராணிகளை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி அவற்றை பராமரிக்கும் முறைகள் குறித்து பகிர்ந்து கொண்டனர். பாதுகாப்பு, கண்காணிக்கப்பட்ட சூழலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கூடிய கற்றல் அனுபவத்தை வழங்கியது. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
04-Dec-2025