உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி

வாராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி

சாணார்பட்டி : கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த தேய்பிறை பஞ்சமி யாக பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதையொட்டி வாராகி அம்மனுக்கு திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகளும், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். பூஜையை பீடாதிபதி சஞ்சீவி சுவாமிகள் நடத்தி வைத்தார். யாக பூஜையில் வரசித்தி வாராகி அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ