மேலும் செய்திகள்
பத்திரகாளி அம்மன் கோயில் விழாவில் பூக்குழி
05-Jun-2025
நெய்க்காரப்பட்டி : பழநி நெய்க்காரப்பட்டி கே.வேலுார் சுயம்பு மண்டு காளியம்மன் உச்சி காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜூன் 6 ல் பூக்குழி கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 9 ல் விநாயகர் விழா, ஜூன் 10ல் சண்முக நதியில் இருந்து பக்தர்கள் அழகு குத்தி கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அன்று இரவு பூக்குழி வளர்க்க ஜூன் 11ல் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். பொங்கல், முடி இறக்குதல், பூச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். வானவேடிக்கை நடைபெற்றது. ஜூன் 13 திரு விளக்கு பூஜை நடைபெற்றது.
05-Jun-2025