உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கத்தியை காட்டி பணம் பறித்த பெண் உட்பட மூவருக்கு சிறை

கத்தியை காட்டி பணம் பறித்த பெண் உட்பட மூவருக்கு சிறை

திண்டுக்கல்: அம்பாத்துரை பஞ்சம்பட்டி அருகே 2010ல் லாரியை வழிமறித்து ஓட்டுநர் பிராங்கிளின் ஐசக் ரபி, ,கிருஷ்ணகுமார் ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.2.70 லட்சம் இரு அலைபேசிகளை கும்பல் பறித்து சென்றது. இந்த வழக்கில் திண்டுக்கல் பொன்னகரம் பகுதியை சேர்ந்த இளையராஜா 43, மதுரை பாக்கியராஜ், பொள்ளாச்சி சுதா 32, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் குமரேசன் வாதாடினார். மூவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை, அபராதம் விதித்து நீதிபதி கனகராஜ் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி