காட்டுமாடுகளால் பயணிகள் அச்சம்
கொடைக்கானல்: கொடைக்கானல் நகரில் முகாமிடும் காட்டு மாடுகளால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.கொடைக்கானல் வன சரணாலயத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதில் காட்டுமாடுகள் பெருகியுள்ளன. வனப்பகுதியில் புல், தண்ணீரில்லாத நிலையில் இதற்காக கொடைக்கானல் நகரில் உலாவுகின்றன. அவ்வப்போது காட்டுமாடுகளால் பயணிகள் ,உள்ளூர்வாசிகள் தாக்கப்பட்டு காயமடைகின்றனர். வனத்துறை தனி குழு அமைத்தும் கட்டுப்படுத்த முடியவில்லை.நேற்று கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 10க்கு மேற்பட்ட காட்டு மாடுகள் அவற்றின் குட்டியுடன் முகாமிட்டன. இதை பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். பயணிகளின் பாதுகாப்பு கருதி நகர் பகுதியில் சுற்றித் திரியும் காட்டுமாடுகளை வனப்பகுதியில் விரட்ட வனத்துறை இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.