தொழிலாளியை வெட்டிய இருவர் கைது
சாணார்பட்டி : அஞ்சுகுழிபட்டி காவேரி செட்டிப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் 29. டூவீலரில் ஆவிளிபட்டி களத்துப்பட்டி அங்கன்வாடி மையம் அருகே சென்றபோது அதே பகுதியை சேர்ந்த இருவர் மணிகண்டனை அரிவாளால் வெட்டினார். விசாரணையில் ஆவிளிபட்டி களத்துப்பட்டியை சேர்ந்த ஸ்ரீ ராம் 21, குமார் 24, வெட்டியது தெரிய இருவரையும் கைது செய்தனர்.