உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுமிகளுக்கு தொல்லை இருவருக்கு தண்டனை

சிறுமிகளுக்கு தொல்லை இருவருக்கு தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களுக்கு ஆயுள்,சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் மாசிலாமணி புரத்தை சேர்ந்தவர் அர்ஜூன்19. இவர் 2022ல் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தார்.தாலுகா போலீசார் அர்ஜூனை,போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளி அர்ஜூனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன்,தீர்ப்பளித்தார். இதேபோல் பெரம்பலுாரை சேர்ந்தவர் பூமணி24. இவர் 2023ல் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். பட்டிவீரன்பட்டி போலீசார் பூமணியை,போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளி பூமணிக்கு,ஆயுள் தண்டனை,ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன்,தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கறிஞராக மைதிலி ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ