விபத்திற்கு வழிவகுக்கும் காட்சிப்பொருளான சிக்னல்கள்
மாவட்டத்தில் முக்கிய நகர் பகுதிகளில் சிக்னல் கம்பங்கள் காட்சிப் பொருளாக இருப்பதால் வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையை சரிசெய்து, சிக்னல்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.