சென்டர் மீடியனில் இல்லை எச்சரிக்கை; தினமும் திணறும் ஓட்டிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ரோடுகள் மத்தியில் சென்டர் மீடியன் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவைகள் பெரும்பாலும் ஒளிரும் விளக்குகள் இல்லாமல் உள்ளன. இதன் காரணமாக வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை தொடர்கிறது. இரவு நேரங்களில் சொல்லவே வேண்டாம். இருள் சூழ்ந்து கிடப்பதால் சென்டர் மீடியன் இருப்பது தெரியாமல் டூவீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர். இதுபோன்ற சென்டர் மீடியனில் ஒளிரும் பட்டடைகள் அமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை அவசியமாகிறது.