மேலும் செய்திகள்
சேதமான தண்ணீர் தொட்டிகளால் அச்சமடையும் மக்கள்...
02-Dec-2024
விபத்து அபாயம் : திண்டுக்கல் பழைய கரூர் ரோடு ஜி.எஸ். நகரில் பீஸ் கேரியல் கட்டை சேதமடைந்து திறந்த வெளியில் உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது .குழந்தைகள் விளையாடும் பகுதி என்பதால் பராமரித்து பாதுகாப்பாக வைக்க வேண்டும்.--ராஜதுரை, திண்டுக்கல்.தேவை அறிவுரை : எரியோட்டில் பஸ் படிக்கட்டில் ஆபத்தான முறையில் மாணவர்கள் தொங்கிக்கொண்டே பயணிக்கின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது. மாணவர்கள் பாதுகாப்பாக செல்ல போலீசார் போதிய அறிவுரை வழங்க வேண்டும். -பாலமுருகன், எரியோடு.நடைமேடையில் தேங்காய் மட்டை : பழநி இடும்பன் குளத்தில் இருந்து கிரிவீதி செல்லும் ரோட்டில் பக்தர்கள் நடந்து செல்லும் நடைமேடையில் தேங்காய் மட்டைகளை கொட்டி குவித்துள்ளனர் .இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது.-குமரன், பழநி.சேதமடைந்த ரோடு : ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் மின்வாரிய அலுவலகம் எதிரில் இருந்து சத்யா நகர் செல்லும் ரோடு சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் உட்பட பலரும் பாதிக்கின்றனர். இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். --முத்துச்சாமி ஒட்டன்சத்திரம்.கழிவுநீர் தேக்கம் : திண்டுக்கல் அனுமந்தநகர் 3வது தெருவில் சாக்கடையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது. குப்பையை உடனுக்குடன் அகற்றி சாக்கடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரியாஸ், அனுமந்த நகர்.சேதமான குடிநீர் தொட்டி : நிலக்கோட்டை பள்ளபட்டி தெற்கு தெருவில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் தண்ணீர் வீணாகிறது. சரிசெய்ய எந்த நடவடிக்கையும் இல்லை. இனியாவது தண்ணீர் தொட்டிய புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சி.அய்யர்பாண்டி, நிலக்கோட்டை.குப்பையால் சுகாதாரக்கேடு : பழநி இடும்பன் மலை இட்டேரி ரோட்டில் இருந்து கிரிவலம் செல்லும் பாதையில் ஈரோடு தீர்த்தக்காவடி மடம் அருகில் குப்பை அள்ளாததால் சுகாதாரத் கேடு ஏற்படுகிறது .பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். குப்பையை அகற்ற வேண்டும்.-பரமசிவம், பழநி.
02-Dec-2024