உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஹிந்து கோயில்களுக்கு எதிராக செயல்படுவோரை எதிர்க்க தயங்க மாட்டோம் முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் காட்டம்

ஹிந்து கோயில்களுக்கு எதிராக செயல்படுவோரை எதிர்க்க தயங்க மாட்டோம் முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் காட்டம்

திண்டுக்கல்:''ஹிந்து கோயில்களுக்கு எதிராக செயல்படுவோரை எதிர்க்க தயங்க மாட்டோம்'' என முன்னாள் போலீஸ் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறினார்.திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலுக்கு வந்த சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் சுவாமி தரிசனம் செய்த பின், வெள்ளை விநாயகர் கோயில் எதிரே அபிராமி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்துக்கான வானம் தோண்டும் பணியின் போது கிடைக்கப்பட்ட மன்னர்கள் உருவம் பதித்த பழைய துாண்களை பார்வையிட்டார்.தொடர்ந்து அவர் கூறியதாவது: கோயில்களில் திருப்பணி என்பது வேறு, புனரமைப்பது என்பது வேறு, புதுப்பித்தல் என்பது வேறு. அறநிலையத்துறையானது புதுப்பித்தல் என்ற பெயரையே உபயோகம் செய்கிறது. இது தவறான வார்த்தை. புனரமைப்பது என்பதே சரியான சொல். 100 ஆண்டுகள் பழமையான கோயில்களை அறநிலையத் துறை புனரமைப்பு செய்ய உரிமை கிடையாது. சட்ட ரீதியாக தொல்லியல் துறை தான் இந்த பணிகளை மேற்கொள்ள முடியும். ஆனால் 600 ஆண்டுகள் பழமையான திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலை முழுமையாக இடித்துவிட்டு 2013 முதல் 2016ம் ஆண்டு வரை நவீன முறையில் கட்டப்பட்டிருக்கிறது.திண்டுக்கல்லில் உள்ள அபிராமி அம்மன் கோயிலை புனரமைப்பு செய்யவில்லை. புதுப்பித்தல் செய்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கோயிலை நவீன கோயிலாக மாற்றி உள்ளனர். இங்குள்ள வண்ணத்தை இப்படி அடிக்க கூடாது. தஞ்சை பெரிய கோயில் உள்ள நிறத்தில்தான் அடிக்க வேண்டும். இங்குள்ள பழமையான துாண்கள் வெளியே எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹிந்து கோயில்களுக்கு எதிராக செயல்படுவோரை எதிர்க்க தயங்க மாட்டோம். திண்டுக்கல் மலைக்கோட்டையிலுள்ள கோயிலில் தெய்வ சிலைகளை மீண்டும் பிரதிஷ்டை செய்ய முடியாத விவகாரம் இங்குள்ள ஹிந்துக்களுக்கு அவமானம்.கோயில் நிதி முறையாக செலவிடப்படுவதில்லை. அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.300 ஊதியம் வழங்கி, அவமானப்படுத்துகின்றனர். கோயில் வளாகத்துக்குள் அலுவலகம், கழிப்பறையை கட்டி பயன்படுத்துகின்றனர். அலுவலகத்துக்கான வாடகை பணம் அறநிலைத் துறை சார்பில் கோயிலுக்கு செலுத்தப்படுவதில்லை என்றார். ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

வைகுண்டேஸ்வரன்
டிச 08, 2024 17:49

சிலை கடத்தலை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று ஓய்வு பெற்ற பிறகும் சிலை கடத்தரவனுங்க கூட கூட்டு சேர்ந்து கொள்ளையில் ஒரு ஷேர் வாங்கிக்கிட்டிருந்ததைக் கண்டு பிடித்து வழக்கு போட்டதும், குய்யோ முறையோ ன்னு வாயிலும் வயிற்றிலும் அடிச்சுக்கிட்டு, நெத்தில பட்ட போட்டுக்கிட்டு முன் ஜாமீன் வாங்கின யோக்கியன் இவரு தான். 23 ஆம் புலிகேசி மீசை இவரைப் பார்த்து தான் டிசைன் பண்ணினார்கள். இந்து கோவில் என்ன கட்சியா அல்லது ஏதாவது கம்பெனி யா? கோவிலுக்கு எதிராக யாரு என்னய்யா செய்யப் போறாங்க???


V RAMASWAMY
டிச 08, 2024 10:35

தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் இந்து அமைப்புக்கள் சிறப்பாகவும் தீவிரமாகவும் செயல்படுகின்றன. முன்னாள் ஐ ஜி இதனை தீவிரமாக எடுத்து மற்ற மாநிலங்கள் அமைப்புகளின் உதவியுடன் இந்து வெறுப்பு, கோயில் இடுப்பு, இந்து கோயில்கள். உடமைமைகள் பாதுகாப்பு இவற்றை சட்டப்படி கடுமையாக எதிர்க்க வேண்டும்.


Sampath Kumar
டிச 08, 2024 08:54

உங்க மத பற்றை கண்டு புல்லரிக்குது அதே சமயம் உங்கமேல போட பட்ட வழக்குகள் ஏன் எதுக்கு என்று சொல்ல முடியமா ? முடியாது அங்கே தான் சாயம் உள்ளது புரிந்தவன் பிஸ்தா


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 08, 2024 09:59

உன்னப்போல உலகத்துல இன்னொரு பிஸ்தா உண்டா சம்பத்து ????


Duruvesan
டிச 08, 2024 15:53

ஏன் இந்த உதரல்


சமீபத்திய செய்தி