உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஏன் இந்த அலட்சியம்! சேதமான அரசு கட்டடங்களால் விபத்து அபாயம்: நடவடிக்கை இல்லாததால் தினம் பீதியில் மக்கள்

ஏன் இந்த அலட்சியம்! சேதமான அரசு கட்டடங்களால் விபத்து அபாயம்: நடவடிக்கை இல்லாததால் தினம் பீதியில் மக்கள்

நத்தம்: திண்டுக்கல் மாவட்டத்தில் சேதமான நிலையில் உள்ள அரசு கட்டடங்களால் விபத்து அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அபாயத்தை உணர்கின்றனர். அதனை சீரமைக்க மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளி கட்டடங்கள், பொது விநியோக கடை, அங்கன்வாடி, மின்மோட்டார் ஊராட்சி அறை, கலையரங்கம், நுாலக கட்டடம், அரசு குடியிருப்புகள் என பெரும்பாலான அரசு கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதுபோன்ற சேதமான கட்டடங்களை கண்டறிந்து முறையாக பராமரிக்காததால் விபத்து அபாயம் உள்ளது. கட்டடங்களில் கூரை, உட்புற சுவர்கள் சிதலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் விபத்து, உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அரசு கட்டி கொடுத்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய பெரும்பாலான கட்டடங்கள் மக்கள் குடியிருக்க தகுதியற்ற நிலையில் உள்ளது. இதில் உயிர் பயத்துடன் மக்கள் தொடர்ந்து வசித்து வருகின்றனர். சேதமான அரசு கட்டடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ............ விபரீதங்களுக்கு வாய்ப்பு மலை கிராமங்கள், பெரும்பாலான கிராம பகுதிகளில் உள்ள நிழற்குடை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதை பயணிகள் பயன்படுத்தி வரும் நிலையில் விபத்து அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம், துறை அதிகாரிகள் இது போன்று சேதமான நிலையில் உள்ள அரசு கட்டடங்களை சீரமைக்க வேண்டும். வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டடம் சேதமடைந்த நிலையில் அதில் மாணவர்கள் தொடர்ந்து படித்து வருகின்றனர். விபரீதங்கள் நிகழும் முன் இதுபோன்று சேதமடைந்த கட்டடங் களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ப.செந்தில் முருகன், மாவட்ட செயலாளர், பா.ஜ., அரசு தொடர்பு பிரிவு, எமக்கலாபுரம். .................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ