பணியாளர்கள் போராட்டம்
சின்னாளபட்டி : ஆத்துார் ஒன்றியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் ரேஷன் கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த ஈடுபட்டு வருகின்றனர். பித்தளைப்பட்டியில் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் சுப்பையா தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் கணேஷ்பாபு முன்னிலை வகித்தார். இணைச்செயலாளர் வனிதா வரவேற்றார்.