எழுத்தாளர் சங்க மாநாடு
நத்தம், : நத்தத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க தாலுகா மாநாடு நடந்தது. தாலுகா தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தாமோ, மாவட்ட துணை த்தலைவர் வைத்திலிங்கபூபதி முன்னிலை வகித்தனர். தாலுகா தலைவராக ஜபார், துணை த்தலைவராக செல்லப்பாண்டியன், செயலாளராக ஜெயராமன், துணை செயலாளராக வெங்கடேஷ் பொருளாளராக சர்க்கரைமுகமது பாரூக், நிர்வாக குழு உறுப்பினர்களாக 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.