டூவீலர் விபத்தில் வாலிபர் பலி
நத்தம்: பூசாரிபட்டியை சேர்ந்தவர் மணி 25, சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த அவர் தேத்தாம்பட்டி பகுதியில் டூவீலரில் சென்ற போது பூதகுடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் 34, ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியதில் மணி சம்பவ இறந்தார்.நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.