விநாயகர் ஊர்வலம் வழிகாட்டு நெறிமுறை
விநாயகர் ஊர்வலம்வழிகாட்டு நெறிமுறைதிருப்பூர், செப். 6-'சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்,' என, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் அறிக்கை: சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் நிறுவி, வழிபடும் நடைமுறை குறித்து, சட்டம் - ஒழுங்கு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத சிலைகள் மட்டும் பயன்படுத்த வேண்டும். சாமளாபுரம் குளம், ஆண்டிபாளையம் மற்றும் பொங்கலுார் பி.ஏ.பி., வாய்க்கால், எஸ்.வி.புரம்., பி.ஏ.பி., வாய்க்கால், கணியூர், அமராவதி ஆறு, கெடிமேடு பி.ஏ.பி., வாய்க்கால் ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.