காவிரி கரையில் சிக்கிய மினி அனகோண்டா
காவிரி கரையில் சிக்கிய 'மினி அனகோண்டா'பவானி:அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டை காவிரி கரையோரத்தில், ஒரு மலைப்பாம்பு நேற்று மதியம் ஊர்ந்து சென்றது. இதைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து, சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற வனத்துறையினர், 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பெற்று கூண்டில் அடைத்தனர். பிறகு சென்னம்பட்டி வனப்பகுதியில் விடுவித்தனர்.