உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மைனர் சிறுவன் விபரீத முடிவு

மைனர் சிறுவன் விபரீத முடிவு

மைனர் சிறுவன் விபரீத முடிவுஅந்தியூர், :அந்தியூர், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ், 48; தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மகன் விஜய், 17; விஜய், தனது தாயாருடன் அருகில் ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு ஜெகதீஸ் அவரது பெற்றோர் வீட்டுக்கும், அவரின் மனைவி அவரது அம்மா வீட்டுக்கும் துாங்க சென்று விட்டனர். வீட்டில் சிறுவன் விஜய் மட்டும் இருந்தார். நேற்று காலை வீட்டுக்கு வந்த ஜெகதீஸ் வெகுநேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். விஜய் துாக்கில் கொண்டிருந்தார். மகனை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர் பரிசோதனையில் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. சிறுவன் சாவுக்கான காரணம் குறித்து, அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை