உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்புஈரோடு:ஈரோடு, கொல்லம்பாளையம், ரயில்வே எலக்ட்ரிக் லோகோ ஷெட் அருகே கடந்த, 25ம் தேதி மதியம், 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. மெரூன் கலர் டி-சர்ட், சிமெண்ட் கலர் வேஷ்டி அணிந்து இருந்தார். வலது கையில் பி.ஆர்.எஸ், இடது கையில் பி+டி என பச்சை குத்தப்பட்டிருந்தது. பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி, சூரம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.* கொடுமுடியை அடுத்த சத்திரப்பட்டி திட்டுக்காடு சுரேஷ் என்பவரின் வாழை தோட்டத்துக்கு கிழக்கே காவிரி ஆற்றங்கரையோரம், 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மிதந்தது. மலையம்பாளையம் போலீசார் கைப்பற்றி, இறந்தவர் யார்? என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை