மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்துஎலக்ட்ரீஷியன் பலி
03-Mar-2025
லாரி சக்கரத்தில் சிக்கிஎலக்ட்ரீஷியன் சாவுஅந்தியூர்:அந்தியூரில், பர்கூர் ரோட்டை சேர்ந்தவர் முருகையன், 48; எலக்ட்ரீசியன். பச்சாம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்தார். நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் உணவு வாங்க அந்தியூருக்கு மொபட்டில் சென்றார். பார்சல் வாங்கிக்கொண்டு திரும்பியபோது, அண்ணாமடுவு எடை நிலையம் அருகே, முன்னால் சென்ற போர்வெல் லாரியை முந்த முயன்றார். அப்போது தடுமாறியதில் முன் சக்கரத்தில் விழுந்ததில், இடுப்பு பகுதியில் லாரி ஏறியது. மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Mar-2025