உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 80 பேரிடம் ரூ.௨௮ லட்சம் மோசடி மேலாளருக்கு விரைவில் கிடுக்கி

80 பேரிடம் ரூ.௨௮ லட்சம் மோசடி மேலாளருக்கு விரைவில் கிடுக்கி

ஈரோடு: கொடுமுடி, வடக்கு புது மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கிரெடிட் அக்சஸ் கிராம் லிமிடெட் கோட்ட மேலாளர் பன்னீர் செல்வம், 38; ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எங்கள் நிறுவனத்தில், ஏழை பெண்க-ளுக்கு சிறு கடன் வழங்குகிறது.இந்நிலையில் கொடுமுடியில் இயங்கிய மதுரா மைக்ரோ பைனான்ஸ், எங்கள் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் கொடுமுடி கிளை மேலாளரான, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோகுல், 27, இணைப்புக்கு பிறகும் பணியில் தொடர்ந்தார்.இந்நிலையில் எங்கள் குழுவினர், கணபதிபாளையம், எம்.ஜி.ஆர். நகர், ஊஞ்சலுர், சாமிநாதபுரம், கொடுமுடி மையங்-களில் தணிக்கை செய்ததில், கோகுல் பல்வேறு வகைகளில், 27.49 லட்சம் ரூபாய் மோசடி செய்ததை கண்டுபிடித்தனர். கோகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதுபற்றி போலீசார் கூறியதாவது: கோகுல் மீது இரு பிரிவு-களில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 80 பேர் மோசடி புகார் செய்துள்ளனர். 28 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி நடந்-துள்ளது.இதில், 20 பேரிடம் விசாரித்து ஆவணங்களை பெற்றுள்ளோம். மீதி நபர்களிடம் ஆவணங்களை பெறும் பணி நடக்கிறது. ஆவ-ணங்களை பெற்றவுடன் ஆதாரத்துடன் கோகுலை கைது செய்ய-வுள்ளோம்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி