டிரைவர்களுக்கு விழிப்புணர்வு
காங்கேயம், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெள்ள கோவிலில் ஆட்டோ, பஸ், கார் டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. வெள்ளகோவில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், விதிகளை கடைபிடிப்பது குறித்து அறிவுறுத்தினார். சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. வெள்ளகோவில் இனஸ்பெக்டர் ஞானபிரகசம், போக்குவரத்து இனஸ்பெக்டர் லயோலா இன்னாசி மேரி, போலீசார் பலர் கலந்து கொண்டனர்.