உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

ஈரோடு:பெண்கள் முன்னேற்றத்துக்கு சேவை புரிந்தோரை ஊக்குவிக்க, சர்வதேச மகளிர் தின விழாவில், முதல்வரால் 'அவ்வையார் விருது' வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில் பிறந்த, 18 வயதுக்கு மேற்பட்டோர், 5 ஆண்டுகள் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, சமூக சீர்திருத்தம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த விளங்குவோர் விண்ணப்பிக்கலாம்.ஈரோடு மாவட்டத்தில் தகுதியான நபர்கள், https://awards.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் வரும், 31க்குள் விண்ணப்பித்து, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கையேடாக தயார் செய்து, தமிழ், ஆங்கிலத்தில் அச்சு செய்து, தலா, 2 நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ