255 மதுபாட்டில் பறிமுதல்
255 மதுபாட்டில்பறிமுதல் ஈரோடு, அக். 4-காந்தி ஜெயந்தியான நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள், தனியார் பார் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. இதை பயன்படுத்தி சட்ட விரோத மது விற்பனை நடக்கிறதா? என மதுவிலக்கு போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மது விற்றதாக, 22 பேரை கைது செய்து, 255 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.