உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைதீர் கூட்டத்தில் 290 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 290 மனுக்கள் ஏற்பு

ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. திருமண உதவித்தொகை, தீ விபத்து நிவாரணம், மயானம் அமைத்தல், முதியோர் உதவித்தொகை பெறுதல் உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 290 மனுக்கள் பெறப்பட்டு, தொடர்புடைய துறைக்கு அனுப்பி, நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, பயிற்சி துணை கலெக்டர் சிவபிரகாசம் மனுக்களை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !