பெருந்துறையில் நாளை பி.எப்., குறைதீர் கூட்டம்
ஈரோடு: பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நாளை, மாவட்ட அளவிலான பி.எப்., குறைதீர் கூட்டம், இ.எஸ்.ஐ.யுடன் இணைந்து நடக்கிறது. காலை, 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை சந்தாதாரர்கள், மதியம், 2:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை தொழிலதிபர்கள் மற்றும் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்-ளது.