ஜெயலலிதா நினைவு தினம்
பெருந்துறை: பெருந்துறை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எட்டாமாண்டு நினைவு நாளை முன்-னிட்டு, அவருடைய போட்டோவுக்கு, கட்சியினர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் தலைமை வகித்தார். இதேபோல் பெத்தாம்பாளையம், நல்லாம்-பட்டியில் ஜெ., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.இதில் நகர செயலாளர்கள் கல்யாணசுந்தரம், பழனிச்சாமி, துரை-சாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் அருணாசலம், ஒன்றிய துணை செயலாளர் அன்பரசு, பெருந்துறை யூனியன் கவுன்சிலர் பழனிசாமி, பெருந்துறை டவுன் பஞ்., கவுன்சிலர்கள் புனிதா, கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.