காவிரி குடிநீர் வினியோகம் டவுன் பஞ்., அறிவுறுத்தல்
பெருந்துறை: காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு, பெருந்துறை மற்றும் கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்., பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது ஆற்றில் குடிநீர் எடுக்கும் இடத்தில் பராமரிப்பு பணி வரும், 22ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதனால், ௨௨ம் தேதி வரை காவிரி குடிநீர் வினியோகம் சரி வர இருக்காது. எனவே மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு டவுன் பஞ்., நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.