தயார் நிலையில் விநாயகர் சிலைகள்
தாராபுரம்: விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள், தாராபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. தாராபுரம் பகுதியில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, 90க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்-ளது. இந்நிலையில், தாராபுரம் தெற்கு நகர் பகுதி இந்து முன்-னணி சார்பாக, 3 அடி முதல், 11 அடி வரையிலான சிலைகள், நேற்று தாராபுரம் கொண்டு வரப்பட்டது. தெற்கு நகரில் மட்டும், 20க்கும் மேற்பட்ட இடங்களில், விநாயகர் சிலைகள், விநாயகர் சதுர்த்தி அன்று, பிரதிஷ்டை செய்யப்படும் என, இந்து முன்-னணி நிர்வாகிகள் கூறினர்.