உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொடக்குறிச்சியில் 10 மி.மீ., மழை பதிவு

மொடக்குறிச்சியில் 10 மி.மீ., மழை பதிவு

மொடக்குறிச்சியில்10 மி.மீ., மழை பதிவு ஈரோடு, டிச. 2-காற்றழுத்த தாழ்வு மற்றும் பெஞ்சல் புயலால், ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக, மொடக்குறிச்சி பகுதியில், 10 மி.மீ., மழை பதிவானது. நேற்று காலை நிலவரப்படி, மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): சென்னிமலை, கொடுமுடி தலா-6,ஈரோடு-6.30, பெருந்துறை-2, அம்மாபேட்டை, பவானி தலா-5, கவுந்தப்பாடி-7.20, கோபி-4.20, எலந்தகுட்டைமேடு-4.60, கொடிவேரி-2.20, குண்டேரிபள்ளம் அணை-1.80,பவானிசாகர் அணை-1.60. மாநகரில் நேற்று அவ்வப்போது சாரல் மழை பெய்தது, இதனால் குளிர்ந்த சூழல் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ