சென்னையில் துாய்மை பணி 100 தொழிலாளர்கள் பயணம்
சென்னையில் துாய்மை பணி100 தொழிலாளர்கள் பயணம்ஈரோடு, அக். 18-சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மாநகராட்சி நிர்வாகம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. அவர்களுக்கு உதவும் வகையில், ஈரோடு மாநகராட்சியில் இருந்து, 100 துாய்மை பணியாளர்கள், இரு பஸ்களில் நேற்று சென்னைக்கு கிளம்பினர். சீரமைப்பு பணிக்கு தேவையான கையுறை, முககவசம், பூட்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கான உபகரணங்களையும் எடுத்து சென்றனர்.