உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டி.என்.பி.எஸ்.சி., டெக்னிக்கல் தேர்வில் 1,404 பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., டெக்னிக்கல் தேர்வில் 1,404 பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., டெக்னிக்கல்தேர்வில் 1,404 பேர் பங்கேற்புஈரோடு, அக். 27-டி.என்.பி.எஸ்.சி., சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிக்கு), அனைத்து மாவட்டங்களிலும் கணினி வாயிலாக நேற்று தேர்வு நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் காந்திஜி சாலை அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம், செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, சி.என்.கல்லூரி, நந்தா கல்லூரி, வேளாளர் கல்லுாரி, வாசவி கல்லுாரி உள்ளிட்ட, 11 மையங்களில் தேர்வு நடந்தது. காலை, மதியம் என இரு வேளை நடந்தது. தேர்வெழுத, 3,092 பேர் விண்ணப்பித்த நிலையில், 1,688 பேர் புறக்கணித்து விட்டனர். 1,404 பேர் மட்டுமே பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி