உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாலித்தீன் கவர் பறிமுதல் 2 கடைகளுக்கு அபராதம்

பாலித்தீன் கவர் பறிமுதல் 2 கடைகளுக்கு அபராதம்

பவானி, நசியனுார் டவுன் பஞ்., பகுதிகளில், செயல் அலுவலர் கோவிந்தராஜா, அலுவலர்கள் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் புகையிலை பொருள், ஜி.எஸ்.எம்., குறைவான பாலித்தீன் கவர் விற்பனை செய்த ஒரு கடை உரிமையாளருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மற்றொரு கடையில் புகையிலை பொருள், பாலித்தீன் கவர் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. பறிமுதல் செய்து உரிமையாளருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ