உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓடப்பள்ளி தடுப்பணையில் 26 மெகாவாட் மின் உற்பத்தி

ஓடப்பள்ளி தடுப்பணையில் 26 மெகாவாட் மின் உற்பத்தி

பள்ளிப்பாளையம் :பள்ளிப்பாளையம் அடுத்த ஓடப்பள்ளி பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை நீர்த்தேக்க பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, நீர்வரத்தின் அடிப்படையில் மின் உற்பத்தி ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும். கடந்த, இரண்டு மாதமாக டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஓடப்பள்ளி தடுப்பணை நீர்த்தேக்கத்தில் முழு கொள்ளளவான, 9 மீ., உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, ௨௬ மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி