உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 3 பவுன் தங்க செயின் திருட்டு

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 3 பவுன் தங்க செயின் திருட்டு

ஈரோடு: ஈரோட்டில், ஓடும் பஸ்சில் பெண்ணின் கழுத்தில் இருந்த, மூன்று பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் திருடி சென்றனர். ஈரோடு, பெரிய சேமூர் பெனாங்கர் தோட்டத்தை சேர்ந்த மணி-கண்டன் மனைவி ராஜாமணி, 52. நேற்று முன்தினம் இரவு, 9:10 மணிக்கு வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப்பில், சித்தோடு வழியே பவானி செல்லும் 3ம் நம்பர் அரசு டவுன் பஸ்சில் ஏறி கனிரா-வுத்தர் குளத்தில், 9:25 மணிக்கு இறங்கினார். அவரை அழைத்து செல்ல ராஜாமணியின் மகன், கனிராவுத்தர் குளம் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார். பஸ்சில் இருந்து இறங்கியவுடன், அவ-ரது கழுத்தை பார்த்து தங்க செயின் எங்கே என கேட்டுள்ளார். ராஜாமணி கழுத்தை தடவி பார்த்த போது, டாலர் மட்டும் ஜாக்-கெட்டில் இருந்தது. மூன்று பவுன் செயினை காணவில்லை. இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய். வீரப்பன்சத்-திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி