உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைதீர் கூட்டத்தில் 473 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 473 மனுக்கள் ஏற்பு

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலை வகித்தார். மகளிர் உரிமைத்தொகை, விதவை உதவித்தொகை, கருணை அடிப்படையில் பணி, போலீஸ் நடவடிக்கை உட்பட கோரிக்கை தொடர்பாக, 473 மனுக்கள் ஏற்கப்பட்டு, அந்தந்த துறை விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. ஆறு பயனாளிகளுக்கு இலவச சலவை பெட்டி, சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு பெற்ற, 10 பேருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை