மேலும் செய்திகள்
76 டன் காய்கறி விற்பனை
11-Nov-2024
ஈரோடு: ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளில், 72.33 டன் காய்கறி, 28.84 லட்சம் ரூபாய்க்கு விற்றது. மாவட்டத்தில் ஈரோட்டில் சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தி, தாளவாடியில் உழவர் சந்தை செயல்படுகிறது. விடுமுறை தினமான நேற்று சம்பத் நகர் உழவர் சந்தைக்கு, 28.57 டன் காய்கறி, பழங்கள் வரத்தாகி, 11 லட்சத்து, 51 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. ஆறு உழவர் சந்தைகளிலும் மொத்தம், 72.33 டன் காய்கறி, பழங்கள் வரத்தாகி, 28 லட்சத்து, 84 ஆயிரத்து, 870 ரூபாய்க்கு விற்றது.
11-Nov-2024