உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 19 கிராம உதவியாளர் பணிக்கு 730 பேர் விண்ணப்பம்

19 கிராம உதவியாளர் பணிக்கு 730 பேர் விண்ணப்பம்

கோபி, கோபி தாலுகாவில் காலியாக உள்ள, 19 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, நேரடி நியமனம் செய்ய கடந்த ஜூலை, 8ம் தேதி முதல், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்படுகிறது. இன்று கடைசி நாள். இந்நிலையில் நேற்று வரை, 730 பேர் விண்ணப்பித்துள்ளனர். எம்.பீல்., பி.இ., எம்.எஸ்.சி., பி.எஸ்.சி., உள்ளிட்ட பட்டப்படிப்பு முடித்தவர்கள் அதிகம் விண்ணப்பித்துள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி