உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டிரைவருக்கு திடீர் வலிப்பால் மரத்தில் மோதிய கல்லுாரி பஸ்

டிரைவருக்கு திடீர் வலிப்பால் மரத்தில் மோதிய கல்லுாரி பஸ்

டிரைவருக்கு திடீர் வலிப்பால் மரத்தில்மோதிய கல்லுாரி பஸ்ஈரோடு, நவ. 5-ஈரோடு அருகேயுள்ள ஒரு கல்லுாரிக்கு சொந்தமான பஸ்சில், நேற்று மாலை கல்லுாரி முடிந்து, மாணவ-மாணவியர் வீடு திரும்பினர். டிரைவர் ஈஸ்வரமூர்த்தி ஓட்டினார். செங்கோடம்பள்ளத்தை கடந்து பஸ் சென்றபோது, டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் நிலைதடுமாறிய பஸ், சாலையோர மரத்தில் மோதி நின்றது.இதில் முன்புற கண்ணாடி உடைந்தது. பஸ்சில் பயணித்த, மாணவ, மாணவியர் என, ௧௩ பேர் லேசான காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !