பஸ் ஸ்டாண்ட் அருகில் தீ தள்ளுவண்டி எரிந்து நாசம்
தாராபுரம்:தாராபுரம், பஸ் ஸ்டாண்ட் அருகில், இரண்டாவது குறுக்கு தெருவில் காலியிடம் உள்ளது. அப்பகுதி மக்கள் இந்த இடத்தில் குப்பை கொட்டி வருகின்றனர். நேற்றிரவு, 7:30 மணியளவில் குப்பையில் தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்படி தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்றனர். ஒரு சில நிமிடங்களில் தீயை அணைத்தனர். ஆனாலும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வியாபாரி ஒருவரின் தள்ளுவண்டி தீயில் முழுவதும் எரிந்து விட்டது.*****************************