உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அம்பேத்கர் நினைவு தினத்தில் சமபந்தி

அம்பேத்கர் நினைவு தினத்தில் சமபந்தி

ஈரோடு: அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோட்டில் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். எம்.பி., அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ., சந்திரகுமார், மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் முன்னிலை வகித்தனர். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, 2,261 பயனாளிகளுக்கு, 16.26 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவி வழங்கி பேசினார். இதை தொடர்ந்து நடந்த சமபந்தி விருந்தில், அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணை மேயர் செல்வராஜ், டி.ஆர்.ஓ., சாந்தகுமார், மண்டல தலைவர் சசிகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கந்தராஜா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ