UPDATED : ஜூன் 22, 2026 07:29 AM | ADDED : ஜூன் 22, 2026 04:28 AM
ஈரோடு:ஈரோடு
திருநகர் காலனி தபால் அலுவலக ஊழியர் சுரேஷ், 38; நேற்று முன்தினம்
மதியம் கருங்கல்பாளையம் கமலா நகர் மாதேஸ்வரன் கோவில் அருகே, சைக்கிளை
நிறுத்தி விட்டு தபால் கொடுக்க சென்றார்.
அப்போது போதையில் வந்த
இருவர், தபால்களை பறித்து, பணம் உள்ளதா என்று கேட்டு தேடினர்.
இல்லாததால் சாக்கடையில் வீசி எறிந்தனர். அவர் சத்தமிடவே அப்பகுதி
மக்களால் இருவரும் சுற்றி வளைக்கப்பட்டனர். கருங்கல்பாளையம்
போலீசார் சென்றபோது ஒருவர் தப்பி விட்டார். ஒருவர் மட்டுமே சிக்கினார்.
தப்பியது அருண், சிக்கியது பிரகாஷ் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் அருணை நேற்று கைது செய்தனர்.விசாரணையில் இருவரும்,
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கக் கன் நகர் சின்னதம்பி மகன் அருண், 22;
கருங்கல்பாளையம் கக்கன் நகர் முதலாவது வீதி ரமேஷ் மகன் பிரகாஷ், 19,
என்பது தெரிய வந்தது.