வட்டார போக்குவரத்து ஆபீசில் வழிகாட்டி பலகையின்றி அவதி
வட்டார போக்குவரத்து ஆபீசில்வழிகாட்டி பலகையின்றி அவதிகோபி, அக். 17-கோபி அருகே பொலவக்காளிபாளையத்தில் இயங்கும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், தரைதளம் மற்றும் முதல்தளம் உள்ளது. அங்கு எந்தெந்த பிரிவு எந்த தளத்தில் இயங்குகிறது என மக்கள் அறிய முடிவதில்லை. குறிப்பாக, மோட்டார் வாகன ஆய்வாளர் பிரிவு, லைசென்ஸ் மற்றும் அனுமதி சீட்டு பெறும் பிரிவு குறித்து விபரம் அறியாமல் மக்கள் குழப்பம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், அதன் ஒவ்வொரு பிரிவு குறித்து, வழிகாட்டி பலகையை முன்பகுதியில் வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.