துப்பாக்கி சுடுதலில் எஸ்.பி.,க்கு பரிசு
ஈரோடு: சென்னையில் போலீஸ் அதிகாரிகளுக்கு இடையே மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி பல்வேறு பிரிவுகளில் நடந்தது. இதில் எஸ்.பி.,க்களுக்கு இடையேயான பிஸ்டல் சுடும் போட்டியில் மூன்றாமிடம், ஒட்டுமொத்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் மூன்றாமிடத்தை, ஈரோடு மாவட்ட எஸ்.பி., ஜவகர் பெற்றார். டி.ஜி.பி., சங்கர் ஜிவால், பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.