உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரி அணையில் பனியன் தொழிலாளி பலி

கொடிவேரி அணையில் பனியன் தொழிலாளி பலி

டி.என். பாளையம்; மதுரை மாவட்டம் ராஜபாளையம், சேத்துாரை சேர்ந்தவர் காளிதாஸ், 28; திருப்பூர் பனியன் கம்பெனியில் பிரிண்டிங் வேலை செய்தார். கொடிவேரி தடுப்பணையில் குளிக்க நண்பர்களுடன் நேற்று வந்தார். தடுப்பணை பகுதியில் குளித்தவர், ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கி பலியானார். பங்களாப்புதுார் போலீசார் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !