மேலும் செய்திகள்
நீர்மட்டம் சரிவு
22-Sep-2024
புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து, 3,181 கன அடியாக அதிகரித்-துள்ளது.ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானி-சாகர் அணை, 105 அடி உயரம்; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில நாட்களாக பவானி-சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகு-தியில் மழை பெய்து வருவதால் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து, 1,403 கன அடியாக இருந்த நிலையில் நேற்று நீர்வரத்து, 3,181 கன அடியாக அதிகரித்-துள்ளது. அணை நீர்மட்டம், 88.76 அடியாகவும், நீர் இருப்பு, 20.7 டி.எம்.சி., ஆகவும் உள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்காக கீழ்-பவானி வாய்க்காலில், 2,300 கன அடி தண்ணீர், அரக்கன்-கோட்டை தடப்பள்ளி பாசனத்திற்கு, 700 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக, 100 கன அடி தண்ணீரும் என மொத்தம், 3,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
22-Sep-2024