கரிய காளியம்மன் குண்டம் திருவிழா
டி.என்.பாளையம். டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிபுத்துாரில் கரிய காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது. கடந்த ஏப்., 14ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. தினமும் மூன்று கால பூஜை நடந்தது. ஏப்., 30ல் பவானி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர்.நேற்று காலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.