உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்கால், குட்டையில் மிதந்த இரு ஆண் உடல்கள் மீட்பு

வாய்க்கால், குட்டையில் மிதந்த இரு ஆண் உடல்கள் மீட்பு

கோபி: கோபி அருகே வாய்க்கால் மற்றும் குட்டையில் மிதந்த, இரு ஆண் உடல்களை போலீசார் மீட்டனர்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே எல்லமடை பகுதியில் உள்ள கூகலுார் கிளை வாய்க்காலில், 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல், அழுகிய நிலையில் மிதப்பதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதேபோல், பொம்மநாயக்கன்பாளையம் அருகே குட்டையில் மிதந்த, 35 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத ஆண் உடலை, போலீசார் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் தவறி விழுந்து இறந்தனரா, தற்-கொலை செய்து கொண்டனரா அல்லது வேறு ஏதேனும் கார-ணமா என்ற கோணத்தில், கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை