ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நுாற்றாண்டு விழா
கோபி: ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா கவுந்தப்பாடியில் நேற்று நடந்தது. பவானி அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., கருப்பணன் விழாவை துவக்கி வைத்தார். முன்னதாக ஆர்.எஸ்.எஸ்., இயக்க தலைவர்கள் போட்டோவுக்கு மலர் துாவி மரியாதை செலுத்-தினர். நுாற்றுக்கும் மேற்பட்ட சுயம் சேவகர்கள் சீருடையில் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ்., இயக்க செயற்குழு உறுப்-பினர் பத்ரி பாலாஜி தலைமை வகித்து பேசினார். மாயவன், சண்-முகம், ஏழுமலை ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.